என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வு செய்தஅதிகாரி"

    • நீர்வள நிலவளத் திட்ட இயக்குனருமான தென்காசி ஜவகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை (நீர்வளம்), கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண் வணிக ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை அரசின் கூடுதல் தலைமை செயலரும், தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்ட இயக்குனருமான தென்காசி ஜவகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நீர் வெளியேற்று கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டு, இப்பாசன கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் பரப்பளவு குறித்தும், பாசனத்தால் தென்னை, நெல், மல்லிகை பூ உற்பத்தி செய்யும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    பின்னர் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் மிட்டஅள்ளி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தமிழ்நாடு நீர்வளம் நிலவளத் திட்டம், கிருஷ்ணகிரி முதல் பாம்பாறு உபவடி நிலப்பகுதி திட்டத்தில் மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கி, கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவைகளை வழங்கி, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் ஜெகதாப் ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நீர்நுட்ப யையம் மற்றும் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பாக திட்டம் செயல்பாடு காற்கறிப் பயிர்களின் துல்லிய பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயி போர்மன்னர் நிலத்தில், காய்கறிகள் மற்றும் தக்காளி நாற்றுகள் உற்பத்தி செய்து, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றம் இதர மாவட்ட விவசாயிகளுக்கு நாற்றுகள் வினியோகம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு, நாற்று உற்பத்தி பணிகள் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பாக வழங்கப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    பின்னர், பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைளில் நீர்மேலாண்மை திட்ட பணிகள் குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் ஆலோசனை மேற்கொண்டார். 

    ×