என் மலர்
நீங்கள் தேடியது "பைக் மீது பஸ் மோதல்"
- 2 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது வேலூர் மெயின் ரோடு அருகே வரும்போது கீழ் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர் முருகன் ஆகியோர் சென்று கொண்டிருந்த பைக் மீது பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் யுவராஜ், முருகன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் இது சம்பந்தமாக யுவராஜ் கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






