என் மலர்
நீங்கள் தேடியது "சிதிலமடைந்த கோவில்"
- 2 ஆயிரம் ஆண்டு பழமையானது
- சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள மிகவும் பழமையான சிவன் ஆலயம் ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 2000 ஆண்டுகள் தொன்மையானது என கூறப்படுகிறது.
இந்தக் கோவிலில் உள்ள கொடிமரம் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது, கோவிலில் சாமி சிலைகள் சிற்பங்கள் பச்சைக் கற்சிற்பங்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் வரலாற்று பிரதானமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஆலயங்கள் சிதிலம் அடைந்து செடி, கொடிகள், முட்புதர்கள் மண்டி கேட்பாரற்று கிடக்கிறது.
இந்தக் கோவிலில் பூஜைகள் எதுவும் நடைபெறாமல் எப்போதும் நடை சாத்தப்பட்டு உள்ளது.
இந்த ஆலயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பக்தர்கள் கோவிலை புணரமைத்து மீண்டும் மக்கள் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும் இந்த கோவில் குளத்தில் குப்பைகள் பாலித்தின் கவர்கள், பாட்டில்கள் போன்றவை வீசப்பட்டு குப்பையாக காட்சியளிக்கிறது.
அறநிலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளர்.






