என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி-ஈரோடு அகல ரெயில் திட்டம்"

    • பழனி-ஈரோடு ரெயில் திட்டத்திற்காக கடந்த 2004ம் ஆண்டு இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து முதல்கட்ட சர்வே பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கியது.
    • கூடுதல் நிதி மத்திய அரசு ஒதுக்க தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    திண்டுக்கல்:

    ரெயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள், வணிகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதங்கத்தை வெளி ப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு போதிய ரெயில் சேவை இல்லாததால் பஸ் போக்குவரத்தையே நம்பியுள்ளனர்.

    நாட்டில் ரெயில் சேவையின் புதிய புரட்சியாக வந்தேபாரத் ரெயில் பல்வேறு மாநிலங்களில் தொடங்கப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்ட ரெயில் தடங்களில் கூட மீண்டும் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை. குறிப்பாக போடி-மதுரை அகல ரெயில்பாதை திட்டம் தொடங்கப்பட்டு இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

    இதேபோல் திண்டுக்கல், திருப்பூா, ஈரோடு மாவட்ட மக்களின் கனவு திட்டமான பழனி-ஈரோடு அகல ரெயில்பாதை திட்டமும் கிடப்பில் போடப்பட்டு ள்ளது. 1915ம் ஆண்டு ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் நெல், பருத்தி, மஞ்சள், மானாவாரி பயிர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வந்தனர்.

    திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி ெதாழில் அதிக அளவு நடந்து வருகிறது. இங்கிருந்து துணி, எண்ணெய் வித்துகள், மஞ்சள், பெட்சீட், ஜமுக்காளம் போன்றவை அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் கோவில் நகரான பழனிக்கு வருடம் முழுவதும் ஈரோடு, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

    இவர்களுக்கும் பழனி-ஈரோடு அகல ரெயில்பாதை திட்டம் பெரிதும் பயனுள்ள தாக இருக்கும். கடந்த 2004ம் ஆண்டு இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து முதல்கட்ட சர்வே பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கியது. தொடர்ந்து 2006-2008ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து சர்வே பணிகள் நடத்தப்பட்டு ரூ.380 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளில் இந்த ரெயில்வே திட்டத்திற்கு ரூ.40 கோடி மட்டுமே ஒதுக்கியது.

    பழனியில் இருந்து தாசநாயக்கன்பட்டி, தாராபுரம், நல்லிமடம், ஊதியூர், காங்கேயம், சென்னிமலை, சங்கூர் வழியாக 91.5 கி.மீ. தூரத்தில் ஈேராட்டுக்கு ரெயில்வே தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் 6 பெரிய பாலம், 42 சிறிய பாலம், 23 ரெயில்வேகேட் அமைக்கப்படுகிறது.

    இத்திட்டத்திற்காக மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை கடிதம் மற்றும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தநிலையில் நடப்பு நிதியாண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இந்த ஆண்டி லாவது பழனி-ஈரோடு ரெயில் திட்டத்திற்கான பணிகளை தொடங்க முன்வரவேண்டும். தற்போது ஒதுக்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என்ற போதிலும் முதல்கட்ட பணிகளை தொடங்கி கூடுதல் நிதி மத்திய அரசு ஒதுக்க தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர் வணிகர்கள் தெரிவிக்கை யில்,

    மஞ்சள் மாநகரான ஈரோட்டுக்கும், பழனிக்கும் இடையே அகல ரெயில்பாதை திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்பது 100 ஆண்டுக்கும் மேல் கனவாகவே உள்ளது.ஒவ்வொரு முறை பாராளுமன்ற தேர்தல் வரும்போது இப்பகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் இத்திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் இன்னும் நிறைவேற்றப்படா மல் உள்ளது.

    இத்திட்டம் நிறைவேறி னால் வெளி நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி அதிகரித்து அன்னியச் செலவாணி நாட்டிற்கு கிடைக்கும். பழனிக்கு வரும் பக்தர்களும் அதிகரி ப்பார்கள். எனவே மத்திய அரசு இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.

    ×