என் மலர்
நீங்கள் தேடியது "மயான கொள்ளை பூஜை"
- தொடர்ந்து சுற்றி வந்த பூசாரி, ஒருகட்டத்தில் சூலாயுதத்தால் அம்மனின் மண் சிலையை குத்தி உடைத்தார்.
- இந்த கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சமத்துவபுரம் அருகே மாசாணியம்மன் கோவில் உள்ளது. இங்கு 6 -ஆம் ஆண்டு மயான பூஜை மற்றும் குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மயான கொள்ளை பூஜை நடைபெற்றது. இதனையொட்டி, களி மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அதன் பின்னர் பம்பை, உடுக்கை உள்ளிட்ட மேளதாளங்களுடன் குறி சொல்லி ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கோவில் பூசாரி, சுடுகாட்டு எலும்பை வாயில் கடித்தபடி அருள் வந்து ஆக்ரோஷமாக ஆடினார்.
மேலும், மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலையை மேளதாளங்களுடன் தொடர்ந்து சுற்றி வந்த பூசாரி, ஒருகட்டத்தில் சூலாயுதத்தால் அம்மனின் மண் சிலையை குத்தி உடைத்தார்.
பின்னர்,சிலையின் மேலிருந்த எலுமிச்சை பழம், மஞ்சள் கயிறுகள், மண் உள்ளிட்ட பொருள்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. பேய், பிணி, பீடைகள், விலகவும் நோய்களிலிருந்து தங்களை காக்கவும் பொதுமக்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி கொண்டனர்.






