என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன் தினம் வேலைக்கு"

    மதியம், தனசேகர் வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மருமகள் செல்போன் மூலமாக தனசேகரைத் தொடர்பு கொண்டு வீட்டில் ஹாலில் உள்ள பேனில், கவுசல்யா தூக்கு போட்டுக் கொண்டதாக கூறினார்.

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம், பவானி, காளிங்கராயன் பாளையம், மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (28). பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

    இவர் தனது மாமா மகள் கவுசல்யா (24) என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் தனசேகர் நேற்று முன் தினம் வேலைக்கு சென்றுவிட்டார். அன்று மதியம், தனசேகர் வசித்து வரும் வீட்டின் உரிமையாளரின் மருமகள் செல்போன் மூலமாக தனசேகரைத் தொடர்பு கொண்டு வீட்டில் ஹாலில் உள்ள பேனில், கவுசல்யா தூக்கு போட்டுக் கொண்டதாக கூறினார்.

    பின்னர், தனசேகர் வருவதற்குள் அக்கம் பக்கத்தினர் கவுசல்யாவை மீட்டு காளிங்கராயன்பாளை யத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர்.

    பின்னர், உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

    அங்கு கவுசல்யாவை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரி வித்தார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    ×