என் மலர்
நீங்கள் தேடியது "அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்"
- ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து ரையாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.
- அரசு புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி-சேலம் சாலையில் உள்ள கே.பி.என் .லட்சுமி மஹாலில் நேற்று மாலை பா.ம.க கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து ரையாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், செய்தியா ளர்களிடம் கூறியதாவது:
சூளகிரி அருகே உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க அரசு 3034 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதனை தமிழக அரசு கைவிட வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்கள், தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி சுங்கச்சா வடியை இடமாற்றம் செய்திட வேண்டும். அதுவரை உள்ளூர் மக்களிடம் சுங்க க்கட்டணத்தில் முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்.
சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், கள்ளச்சா ராயத்தை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை யினருக்கு விருது வழங்குகிறார்.
அதே நாளில் கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் சாராயம் அதிகளவில் விற்பனை செய்த ஊழியர்களுக்கு நற்சான்றிதழை, மாவட்ட கலெக்டர் வழங்குகிறார்.
மதுவிலக்கு கொண்டு வருவதில், தி.மு.க அரசின் நிலைப்பாடு, கொள்கை குறித்து முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்திட வேண்டும்.
என்.எல்.சி. நிறுவனத்தை தனியாருக்கு விற்க போகிறோம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அப்பகுதியில் 25ஆயிரம் ஏக்கர் நிலங்கள் யாருக்காக கையகப்படுத்த உள்ளன? வேளாண்மை துறை அமைச்சர் விவசாயிகள் காக்க வேண்டும். மாறாக விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து, என்.எல்.சி.க்கு கொடுக்க முயற்சி செய்து வருகிறார்.
இடைத்தேர்தல் தேவைற்ற ஒன்று. இதனால் மக்களுக்கும், அங்கு பிரச்சாரத்தில் ஈடுபடும் அமைச்சர்களுக்கு நேரம் விரயம்.
கிருஷ்ணகிரி மாவட்ட த்தில் 200 கிரானைட் குவாரிகள் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு ரூ.1லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தி, தொடர்புடைய அலுவலர்கள், அவருக்கு உறுதுணையாக இருப்பவ ர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் தொழிற்சா லைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து சட்டமாக நிறைவேற்றிட வேண்டும்.
ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் வேலூர் மாவட்டம் வரை செயல்படுத்த வேண்டும். காவிரி உபரிநீர் திட்டம் செயல்படுத்தினால் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






