என் மலர்
நீங்கள் தேடியது "கடைகளில் போலீசார் திடீர் சோதனை"
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை
- போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் கடைகளில் போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் கஞ்சாவை தடுக்கும் விதமாக ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் வடக்கு போலீசார் இன்று காலை காந்தி ரோடு, பாபு ராவ் தெரு, சைதாப்பேட்டை, மெயின் பஜார் உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர்.






