என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயலாளரிடம் விசாரணை"

    • கடந்த 2022-ல் முதல்-அமைச்சரின் தனிப்–பிரிவுக்கு புகார் அளித்தார்.
    • இதுகுறித்து விசாரிக்க, சேலம் கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பனம–ரத்துப்பட்டி, நிலவாரப்பட்டி ஊராட்சியில் கடந்த 2020-ம் ஆண்டு 42 வீட்டு மனை பிரிவுக்கு அனுமதி வழங்க, வசூலிக்கப்பட்ட தொகையை அரசு கணக்கில் சேர்க்காமல், அப்போதைய பி.டி.ஓ ராஜா, ஊராட்சி செயலாளர் விவேகானந்தம் ஆகியோர் முறை கேட்டில் ஈடுபட்டதாக, அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் கடந்த 2021-ல், உதவி இயக்குனரிடம் புகாரளித்தார்.

    மீண்டும் இது தொடர்பாக கடந்த 2022-ல் முதல்-அமைச்சரின் தனிப்–பிரிவுக்கு புகார் அளித்தார். இதுகுறித்து விசாரிக்க, சேலம் கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து, சேலம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ராமஜெயம் (தணிக்கை), கடந்த 19-ந் தேதி மனுதாரர், ஊராட்சி செயலர், தற்போது சங்க–கிரியில் உதவி இயக்குனராக உள்ள ராஜா (அப்போதைய பி.டி.ஓ) ஆகியோர் 27-ந் தேதி ஆஜராக உத்தரவிட்டார்.

    இதன்படி, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஆஜரான தங்கராஜ், ஊராட்சி செயலர் விவேகா–னந்தம், உதவி இயக்குனர் ராஜா ஆகியோரிடம் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

    இதைதொடர்ந்து நில–வாரப்பட்டி ஊராட்சியில் சம்பந்தப்–பட்ட வீட்டுமனை உரிமை–யாளர்களிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    ×