என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதவி கேட்டு விண்ணப்பம்"

    • சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் மாநில மத்தியக்குழுவின் கூட்டம் நடந்தது
    • விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து வழங்குவது என தீர்மானம்

    வேலூர்:

    தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் மாநில மத்தியக்குழுவின் கூட்டம் தமிழக அரசின் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் பூஜாரி தலைமையில் சென்னையில் நடந்தது.

    முன்னதாக சிறைத்துறை துணைத்தலைவர் மற்றும் சங்க செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார்.

    சங்கத்தின் இயக்குநரும் சிறைத்துறை துணைத்தலைவருமான ஆர்.கனகராஜ் செயல்பாடுகள் குறித்து பேசினார். பொருளாளார் வழக்கறிஞர் எஸ்.ஞானேஸ்வரன் நிதிநிலை அறிக்கையினை சமர்பித்து பேசினார்.

    சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் மத்திய குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் சரக சிறைத்துறை துணைத்தலைவர் ஜி.பி.செந்தாமரைக்கண்ணன், மகளிர் சிறை கண்காணிப்பாளர் நீலமணி உள்ளிட்டோர் பேசினர்.

    சரக சிறைத்துறை துணைத்தலைவர்கள் கே.ஜெயபாரதி, (திருச்சி), சண்முகசுந்தரம், (கோவை), பழனி (மதுரை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தற்போது வரை சுமார் 300 முன்னாள் கைதிகளிடமிருந்து உதவி கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றினை பரிசீலனை செய்து உடனடியாக முன்னாள் சிறைவாசிகள் சங்கத்தின் சார்பில் உதவிகள் வழங்க திட்டமிடுவது மற்றும் வேலூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள விண்ணப்பங்களையும் பெற்று ஒருங்கிணைத்து வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    ×