என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலரை தாக்கிய வாலிபர்"

    • பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்
    • கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே உள்ள பாண்டியன் நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது43).

    இவர் நடுஹட்டி ஊராட்சியின் 1-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    இவர் தனது கிராமத்தில் உள்ள மக்களிடம் கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி வந்தார்.

    இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த கவுதம்(21) என்பவருக்கும், மனோகரனுக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக தெரிகிறது. கவுதம் திருப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி கவுதம் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது மீண்டும் இது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர், அங்கு கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து மனோகரனை தாக்கி விட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

    காயம் அடைந்த மனோகரன் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்தநிலையில் சம்பவம் நடந்து 3 நாட்களாகியும், கவுன்சிலரைத் தாக்கி விட்டு தப்பிச் சென்ற வாலிபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், உடனடியாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாண்டியன் நகர் கிராம மக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கவுன்சிலரைத் தாக் கிய கவுதம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற ்கொண்டு வருகின்றர். இதையடுத்து கிராம மக்கள் அங் கிருந்து கலைந்து சென்றனர்.

    ×