என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைத்து மெகா சூதாட்டம்"

    • பழனிக் கவுண்டன்பாளையம் பகுதியில் காளிங்கராயன் வாய்க்கால் கரையில் ஒரு கும்பல் சேவல்களை சண்டையிட வைத்து சூதாடி கொண்டிருந்தனர்
    • 7 சேவல்களை வைத்து பணம் கட்டி சண்டையிட வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    ஈரோடு, 

    மலையம்பாளையம் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மன்சூர் அலி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மலையம் பாளையம் அடுத்த பழனிக் கவுண்டன்பாளையம் பகுதியில் காளிங்கராயன் வாய்க்கால் கரையில் ஒரு கும்பல் சேவல்களை சண்டையிட வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணை–யில் அவர்கள் நாமக்கல் மாவட்ட த்தைச் சேர்ந்த சஞ்சய் (23), மணிக ண்டன்(25), தேவராஜ் (19), சபரி (19), திலீப் (27), தாமோ தரன்(25), சசிகுமார்(40), கிஷோர் (26), செந்தில்குமார் (40),

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார்(35), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய்(30), சுப்ரமணி (29), பிரகாஷ் (24), சபி (32), மணிவேல்(28), மனோஜ் குமார்(33), ரமேஷ் (34), சுவதிராஜா (42) ஆகியோர் என்பதும் இவர்கள்

    7 சேவல்களை வைத்து பணம் கட்டி சண்டையிட வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மலையம்பாளையம் போலீசார் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 சேவல்கள், ரூ.5000 ரொக்க பணம், மற்றும் 12 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். 

    ×