என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவேகானந்தர் பிறந்த நாள் விழா"

    • விவேகானந்தரின் 160- வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • விவேகானந்தரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதியமான் , பப்ளிக் பள்ளி, அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பாக விவேகானந்தரின் 160- வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதில் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன், செயலர் ஷோபாதிருமால்முருகன், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு விவேகானந்தரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    முன்னதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் சீனிவாசன் தலைமை தாங்கி விவேகானந்தரின் விழா பேரணியை தொடங்கி வைத்தார்.

    இப்பேரணியில் பாரத சாரண சாரணியர், ஜூனியர் ரெட் கிராஸ், யூத் ரெட் கிராஸ், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 1500 பேர் கலந்துகொண்டு விவேகானந்தர் மற்றும் சகோதரி நிவேதிதா போன்று வேடமணிந்தும் விவேகானந்தரின் பொன் மொழி பதாகைகள் ஏந்தியும் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பிலிருந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

    இறுதியாக அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விவேகானந்தர் பற்றிய வாழ்க்கை குறிப்புகளை மாணவ, மாணவிகளுக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் விரிவாக எடுத்துரைத்தார்.

    ×