என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்சு மர்ம நபருடன் ஓட்டம்"

    • பல் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
    • அடையாளம் தெரியாத ஒரு நபருடன் லாவண்யா சென்றுள்ளது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள மிட்டபள்ளியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி லாவண்யா (வயது 34).

    இவர் ஊத்தங்கரையில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 1-ந்தேதி வேலைக்கு சென்ற லாவண்யா அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் விசாரித்து அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அடையாளம் தெரியாத ஒரு நபருடன் லாவண்யா சென்றுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசில் பழனிசாமி புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமானலாவண்யாவை தேடி வருகின்றனர்.

    ×