என் மலர்
நீங்கள் தேடியது "தாக்கிய ஆட்டோ டிரைவர்"
- அத்துமீறி ஆஸ்பத்திரியில் நுழைந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் பிஷப் டேவிட் நகரை சேர்ந்தவர் அன்பரசு (வயதுச 53) சிஎம்சி ஆஸ்பத்திரியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று சிஎம்சி ஆஸ்பத்திரி வளாகத்தில் பணியில் இருந்தார்.
அப்போது தோட்டப்பாளையம் மேட்டு தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திலீப் குமார் (27) என்பவர் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் ஆட்டோ ஓட்டிச் சென்றார். பலமுறை செக்யூரிட்டிகள் கூறிய பிறகும் திலீப்குமார் அத்துமீறி ஆஸ்பத்திரியில் வந்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அன்பரசு ஆட்டோ டிரைவர் திலீப் குமாரை தட்டி கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.ஆத்திரமடைந்த திலிப் குமார் அன்பரசை கையால் தாக்கினார். அங்கிருந்த வர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
இது குறித்து அன்பரசு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் திலீப்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






