என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் தள்ளுபடி சான்றிதழ்கள்"

    • மகளிர் சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை அமைச்சர் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கூட்டுறவுத்துறை சார்பாக 1046 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.42 கோடியே 44 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம் திட்ட விளக்கவுரையாற்றினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    கூட்டுறவு நிறுவனங்கள் முலம் வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 31ம் தேதியில் நிலுவையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு மாநிலம் முழுவதும் அசல் ரூ.2459 கோடியே 57 லட்சமும், வட்டி ரூ.215 கோடியே 7 லட்சமும் என மொத்தம் ரூ.2,674 கோடியே 64 லட்சம் தள்ளுபடி செய்து அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100 பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 1046 மகளிர் குழுக்களை சேர்ந்த 10,159 மகளிர் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு கடந்த மார்ச் 31ம் தேதியில் நிலுவையில் இருந்த அசல் ரூ.38 கோடியே 32 லட்சமும், வட்டி ரூ.4 கோடியே 12 லட்சமும் என மொத்தம் ரூ.42 கோடியே 44 லட்சம் மதிப்பில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், அனைத்து தகுதிவாய்ந்த குழுக்களுக்கும் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தள்ளுபடி சான்று விரைந்து வழங்கப்படும். தள்ளுபடி கிடைக்கப்பட்ட அனைத்து குழுக்களுக்கும் மீண்டும் கடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார்.

    இந்நிகழ்ச்சியின் போது, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை அமைச்சர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்கள் சுந்தரம், செல்வம், முன்னாள் எம்எல்ஏ,. செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், கிருஷ்ணகிரி நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, நாகோஜனஅள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மத்திய கூட்டுறவு வங்கி மேலா ளர்கள், கூட்டுறவு த்துறை சார் பதிவாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் செயலா ளர்கள், பதிவாளர்கள் கலந்துகொண்டனர்.

    ×