என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போப் 16-ம் பெனடிக்ட்"

    • போப் ஆண்டவர் 16ம் பெனடிக் இன்று காலை 9:34 மணிக்கு காலமானார்.
    • முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    உலக கத்தோலிக்கர்களின் தலைவராக இருப்பவர் போப் பிரான்சிஸ். இவருக்கு முன் போப் ஆண்டவராக 16-ம் பெனடிக்ட் (95), இருந்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார் என வாடிகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    இந்நிலையில், முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், திருச்சபைக்காகவும் ஏசு கிறிஸ்துவின் போதனைகளுக்காகவும் தம் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் முன்னாள் போப் 16-ம் பெனடிக். சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார் என பதிவிட்டுள்ளார்.

    • 5 நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் இறுதி சடங்குகள் வாடிகன் தேவாலயத்தில் இன்று நடக்கிறது.
    • இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    வாடிகன் சிட்டி:

    உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31-ந்தேதி மரணம் அடைந்தார்.

    போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து பதவி விலகிய அவர் வாடிகனில் ஓய்வில் இருந்து வந்தார்.

    அவருக்கு பின் போப்பாண்டவர் பிரான்சிஸ் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த மாதம் 28-ந்தேதி போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக இப்போதைய போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

    இந்தநிலையில் போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் சிகிச்சை பலன் இன்றி கடந்த 31-ந்தேதி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 95. அவரது உடல் வாடிகன் அரண்மனையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அங்கு இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    5 நாட்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் இறுதி சடங்குகள் வாடிகன் தேவாலயத்தில் இன்று நடக்கிறது.

    அடக்க திருப்பலிக்கு பின்னர் அவரது உடல், சைப்ரஸ் மர பெட்டிக்குள் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது. அந்த பெட்டிக்குள் போப்பாண்டவரின் சின்னம், அவரது உருவம் பொறித்த பதக்கங்கள் உள்ளிட்டவையும் வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து பாதிரியார்கள், ஆயர்கள், கர்தினால்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • வாடிகனில் முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    • பதவியில் உள்ள போப்பாண்டவர், தனக்கு முந்தைய போப்பாண்டவரின் இறுதிச்சடங்கை நடத்தியது இது முதல் முறை.

    வாடிகன் சிட்டி:

    உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல்நலக் குறைவால் கடந்த 31-ம் தேதி மரணம் அடைந்தார். போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து பதவி விலகிய அவர் வாடிகனில் ஓய்வில் இருந்துவந்தார். அவருக்கு பின் போப்பாண்டவர் பிரான்சிஸ் அந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, கடந்த மாதம் 28-ம் தேதி போப்பாண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தற்போதைய போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்தார். சிகிச்சை பலன் இன்றி கடந்த 31-ம் தேதி போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் மரணம் அடைந்தார். அவரது உடல் வாடிகன் அரண்மனையில் பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், முன்னாள் போப்பாண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் அடங்கிய பேழையை புனித பீட்டர் சதுக்கத்தில் வைத்து இறுதி பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உலகமெங்கும் இருந்து கத்தோலிக்க பாதிரியார்கள், பேராயர்கள், கார்டினல்கள், கன்னியாஸ்திரிகள் கலந்துகொண்டனர்.

    மூட்டு வலியால் அவதியுற்று வரும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சக்கர நாற்காலியில் வந்து, இந்த இறுதி பிரார்த்தனையை நடத்தினார்.

    பதவியில் உள்ள போப் ஆண்டவர் ஒருவர், தனக்கு முந்தைய போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கை நடத்தியது வரலாற்றில் இதுவே முதல் முறை. பிரார்த்தனைக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் உடல் வைக்கப்பட்டிருந்த பேழை மீது போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனித நீர் தெளித்தார். இறுதியாக போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்டின் உடல், அவருக்கு முந்தைய போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த புனித பீட்டர் தேவாலயத்தின் அடியில் அமைந்துள்ள 'வாடிகன் கிரோட்டஸ்' என்று அழைக்கப்படுகிற இடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு மூன்றடுக்கு பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

    ×