என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபட் விபத்து"

    • 3 பேர் படுகாயம்
    • ரெயில் நிலையத்துக்கு சென்றபோது நடந்தது

    காவேரிப்பாக்கம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த செதுக்கரை கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது மகள் மகா (வயது 6). குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    அரையாண்டுத்தேர்வு விடுமுறை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த மேல்வீராணம் பகுதியில் உள்ள தனது பாட்டி விஜயா (60) வீட்டிற்கு வந்திருந்தாள். இந்த நிலையில் நேற்று செதுக்கரை கிராமத்திற்கு விஜயா, சிறுமி மகா மற்றும் உறவினர் மகன் சதீஷ் (15) ஆகியோர் மொபட்டில் பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.

    மேட்டுமங்களம் அருகே வந்த போது தொழிலாளர்களை ஏற்றி செல்ல நின்றிருந்த தனியார் நிறுவன பஸ் மீது எதிர்பாராத விதமாக மொபட் மோதி, அதில் சென்ற 3 பேரும் படு காயம் அடைந்தனர். 

    ×