என் மலர்
நீங்கள் தேடியது "நேர்காணல் நிகழ்ச்சி"
- துணை தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது.
- 300- க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் மாவட்ட அணிகளின் தலைவர், துணை தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது.
ஓசூர் - தளி சாலையில் உள்ள மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மற்றும் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் பி.முருகன், ஒய்.சின்னசாமி, புஷ்பா சர்வேஷ், ஓசூர் மாநகர செயலாளரும்,மேயருமான எஸ்.ஏ.சத்யா,
மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சுமார் 300- க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடைபெற்றது.






