என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையர் அட்டகாசம்"

    • அவர்கள் விலாசம் கேட்பது போல் நடித்து பார்வதி கண்ணில் மிளகாய் பொடியை தூவினர்
    • திட்டக்குடி செல்லும் சாலையில் மின்னல் வேகத்தில் சென்றனர்.

     கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பூலா ம்பாடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் விருத்தகிரி. அவரது மனைவி பார்வதி (வயது45). இவர் புல்லூர் செல்லும் மண் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டி ருந்தார். அப்போது அந்த வழியாகஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வந்தனர். அவர்கள் விலாசம் கேட்பது போல் நடித்து பார்வதி கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் கீேழ தள்ளி அவரது கழுத்தில் 5 பவுன் தாலிச் செயினை பறிக்க முயன்றனர்.

    அப்போது பார்வதி செயினை கெட்டியாக பிடித்து கொண்டு சத்தம் போட்டுள்ளார் அதை பொறுப்படுத்தாத மர்ம நபர்கள் பாதியை மட்டும் அறுத்து கொண்டு திட்டக்குடி செல்லும் சாலையில் மின்னல் வேகத்தில் சென்றனர். இது குறித்து பார்வதி வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×