என் மலர்
நீங்கள் தேடியது "பழனி கும்பாபிஷேக முன்னேற்பாடுகள்"
- பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழா முன்னேற்பாடு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- பல்வேறு துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விரைவில் தகுந்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள் ளப்பட்டு ள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழா முன்னேற்பாடு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் விசாகன் பேசியதாவது:-
பழனி கோவில் நிர்வாகம் சார்பில் நிரந்தர காவடி மண்டபங்கள் கட்டப்பட்டு, குடிநீர், மின் வசதி, கட்டணமில்லா கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும். கிரிவீதி பகுதியில் தேவையான அளவில் கழிப்பட வசதிகள், யானைப் பாதையில் தேவையான அளவில் தற்காலிக கழிப்பி டங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தேவையான இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏதுவாக நீர் நிரப்பப்பட்ட டிரம்கள் தேவையான டம்ளர்கள் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். பாதயாத்திரை வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அவர்க ளுக்கு அம்மையநாயக்கனூர் சுங்கச்சாவடி, செம்பட்டி, மூலச்சத்திரம், ரெட்டியார்சத்திரம், தாராபுரம் சாலை, நத்தம், சமுத்திரப்பட்டி, அய்யலூர் மற்றும் வேடசந்தூர் ஆத்துமேடு உட்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் சாவடிகள் அமைத்து ஒளிரும் குச்சிகள், ஒளிரும் பட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையம் மற்றும் அருள்ஜோதி வீதி ஆகிய இடங்களில் மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு கழிப்பிடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக இலவச மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். பாதவிநாயகர் கோயில், பஸ் நிலையம், கிரிவீதி, ரயில் நிலையம் ஆகிய இடங்களில் அவசர கால ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். சண்முகநதி, இடும்பன்கோயில் ஆகிய இடங்களில் தலா ஒரு மருத்துவக்குழு தேவையான மருந்துகளுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட வேண்டும்.
விழா நாட்களில் பழனி நகர் மற்றும் திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தடையற்ற மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தைப்பூசத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் குளிக்கும் இடங்களான இடும்பன்குளம், சண்முகநதி போன்ற இடங்களில் விபத்துக்கால தடுப்பு உபகரணங்கள் மற்றும் நீச்சல் திறமையுள்ள தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரையிலான சாலை, சண்முகநதியிலிருந்து பைபாஸ் வரையிலான சாலைகளில் ஆங்காங்கே சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பழனி நகரை நோக்கிச் செல்லும் பக்தர்கள் நடந்து வர பயன்படுத்தும் அனைத்து சாலைகளின் இருபுறங்கிலும் உள்ள செடிகள் மற்றும் புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக சாலையின் ஓரங்களில் ஒளிரும் கயிறுகள், மணல் மூட்டைகள் போன்றவை அமைக்கவும், மெயின் ரோட்டில் கிளைச் சாலைகள் சேரும் இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும்.
பழனி நகருக்கு வரும் வழியில் உள்ள வழித்தடங்களில் சேகரமாகும் குப்பைகள் அந்தந்த பகுதி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளால் உடனுக்குடன் அகற்றி, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
உணவு விடுதிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தினை அடிக்கடி செய்து, பக்தர்களுக்கு சுகாதாரமான உணவுப்பொருள், நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட காவல்துறை சார்பில் தேவையான அளவு காவலர்கள் மற்றும் பெண் காவலர்களை பணியமர்த்தி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பழனி அரசு மருத்துவமனையில் தேவையான மருந்துகள், மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும். பல்வேறு துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விரைவில் தகுந்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள் ளப்பட்டு ள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன்,கோயில் துணை ஆணையர் பிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் பிரேம்குமார், பழனி சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






