என் மலர்
நீங்கள் தேடியது "மாமல்லபுரம் நாட்டிய விழா"
- விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மாமல்லபுரத்தில் அதிகளவில் இருந்தது.
- சென்னை சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயா, ஸ்ரீகலாரங்கா குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் 2022ம் ஆண்டிற்கான, இந்திய நாட்டிய விழாவை நேற்று அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர். சுற்றுலாத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மாமல்லபுரத்தில் அதிகளவில் இருந்தது. நாட்டிய விழாவின் இரண்டாம் நாளான இன்று திண்டிவனம் கலைசுடர்மணி பரமசிவத்தின் கழைக்கூத்து, சென்னை சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயா, ஸ்ரீகலாரங்கா குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.






