என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது"

    • மோட்டார் சைக்கிள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் கொண்ட போலீஸ் படையினர் நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமம் அருகே திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் பொட்டலங்களில் அரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது மேலும் அந்த கஞ்சா ஆந்திர மாநிலத்தில் இருந்து குடியாத்தம் பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது.

    மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில் குடியாத்தம் தரணம் பேட்டை ஆரணி நன்னூமியம் தெருவை சேர்ந்த முகமது யூசுப்சையத் (வயது 23), காசிம் சாயபு தெருவை சேர்ந்த முஜ்ஜமீல் (23) என்பது தெரியவந்தது போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளையும், அரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    ×