என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விரிவாக்கம்"

    • ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தனியார் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் .
    • ரோட்டை அடைத்து ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன.

    உடுமலை : 

    உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் வழியாக தினமும் உடுமலை, பொள்ளாச்சி ,ஆனைமலைக்கு பஸ்கள் வந்து செல்கின்றன. இது தவிர சுற்றுலா தலங்களான திருமூர்த்தி மலை, டாப்ஸ்லிப் , ஆழியார் உள்ளிட்ட இடங்களுக்கும் இந்த வழியாக ஏராளமான சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் தேவனூர் புதூரில் ரோட்டை அடைத்து ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால் பஸ்கள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன.

    இதனால் வாகனங்கள் சாலையில் இருபுறமும்காத்திருக்கும் நிலை உள்ளது .இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே உடனடியாக ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் தனியார் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×