என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரை.வைகோ போட்டி"

    • வரும் எம்.பி. தேர்தலில் பெரம்பலூரில் துரை.வைகோ போட்டியிட வலியுறுத்தப்பட்டது
    • மாவட்ட செயற்குழு கூட்டம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் எம்.எல்.ஏ.வுமான சின்னப்பா தலைமை தாங்கினார். அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார்.

    மாநில துணை பொதுசெயலாளர் முருகன், மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொகையா, திருச்சி மாநகர் மாவட்ட செயயலாளர் சோமு, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில், 2024 எம்.பி. தேர்தலில் ம.தி.மு.க. தலைமைக்கழக செயலாளர் துரை.வைகோ பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வேண்டும்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கப்படும் மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, மிளகாய் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தும், வேளாண் அங்காடிகளை அரசே ஏற்றும் நடத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் வழியாக கரூருக்கு ெரயில் பாதை அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொலைதூர மாவட்டங்களுக்கும் பேருந்துகள் சென்று வரும் வகையில் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.

    திருச்சி காவிரியில் தருப்பணை கட்டி கால்வாய் மூலம் பெரம்பலூருக்கு காவிரி உபரி நீரை கொண்டு வந்து ஏரி, குளம்போன்ற நீர்நிலைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செல்லகதிர்வேல், சுப்ரமணி, சரவணன், காமராஜ், ரபியுதீன், மணிவண்ணன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    ×