என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா இடங்கள் மேம்படுத்தப்படுமா"

    • கொடைக்கானலில் அரியவகை சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் இருப்பது யாரும் அறியா வண்ணம் உள்ளது.
    • ஐந்து வீடு அருவி, ஓராவி அருவி, ஆதிமனிதன் வாழ்ந்த குகைகள், கல்திட்டைகள், பழங்கால மனிதர்கள் வாழ்ந்தகுகைகள் என சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கக்கூடிய இதுவரை வெளிஉலகுக்கு தெரியாத இடங்கள் நிறைந்துள்ளன.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி கொடைக்கானலில் குளுமையான சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

    இவர்கள் மோயர்சதுக்கம், தூண் பாறை, குணா குகை, பைன் மரச்சோலை, பசுமைப்பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, படகு குழாம் போன்ற சுற்றுலா இடங்களை மட்டும் கண்டு ரசித்து செல்கின்றனர். சிலர் மேல் மலை கிராமத்தில் உள்ள சுற்றுலா இடங்களை மட்டும் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

    ஆனால் கொடைக்கானலில் அரியவகை சுற்றுலாத்தலங்கள் அதிக அளவில் இருப்பது யாரும் அறியா வண்ணம் உள்ளது.மேல் மலை கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு அரிய வகை அருவி உள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல பாதை உருவாக்க வேண்டும்.

    இதேபோல் பேத்துப்பாறை கிராமத்தில் ஐந்து வீடு அருவி, ஓராவி அருவி, ஆதிமனிதன் வாழ்ந்த குகைகள், கல்திட்டைகள்,அடுக்கம் கிராமப் பகுதியில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்தகுகைகள் என சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கக்கூடிய இதுவரை வெளிஉலகுக்கு தெரியாத இடங்கள் நிறைந்துள்ளன.

    சுற்றுலா வளர்ச்சி கழகம் தங்கள் கட்டுப்பாட்டில் இந்த இடங்களை கொண்டு வந்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்.

    கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி கிராமத்தில் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவிலைப்போல் வரலாற்று சிறப்புமிக்க பண்டையகால முருகன் கோவில் உள்ளது.

    இங்கு பழங்கால கல்வெட்டு கோவிலின் சிறப்பை பற்றி பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் இதே பகுதியில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கு ஏற்ற அருவியும் உள்ளது. தற்போது இந்த கோவிலை பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவிலாக அறங்காவல் குழு ஏற்று உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பி தொழில் செய்வோரின் கோரிக்கையாக உள்ளது.

    கொடைக்கானல் சிட்டி வியூ சுற்றுலா பகுதி, அடுக்கம் பகுதியில் உள்ள கற்சிற்பம், மேல் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கையான பல்வேறு இடங்கள், புதுமையாக அமைந்துள்ள பகுதிகளை புதிய சுற்றுலா தளங்களாக மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×