என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோலப்பொடி விற்பனை மும்முரம்"

    • மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு திருவிளக்கு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெறும்.
    • மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பொங்கல் வரையிலும் கோலப்பொடிகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

    திண்டுக்கல்:

    மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாள் என்று கூறுவதுண்டு. ஏனெனில் மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு திருவிளக்கு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெறும்.

    இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இதேபோல வீடுகளில் விதவிதமான கலர் கோலம் வரைந்து அதன் நடுவில் பசுஞ்சாணத்தில் பூசணிப்பூ வைத்து அழகுபடுத்துவார்கள். இதற்காக திண்டுக்கல்லில் பல்வேறு நிறங்களில் கோலப்பொடிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 1 பாக்கெட் ரூ.5 முதல் விற்பனை செய்யப்படுகிறது. மகளிர் சுயஉதவிக்குழுவினர் இந்த கலர் கோலப்பொடி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பொங்கல் வரையிலும் கோலப்பொடிகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். வீடுகள் மட்டுமின்றி கோவில்களிலும் அலங்கரிக்க கோலப்பொடிகள் வாங்கிச் செல்வார்கள். இதனை கருத்தில் கொண்டு அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ள பொடிகளை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    இதனால் தொழிலில் ஈடுபட்டுள்ள சுயஉதவிக் குழுவினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×