என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டா வழங்கக்கோரி"

    • 35-வது வார்டு பகுதியில் வசிப்போருக்கு கடந்த பல ஆண்டுகளாகவே குடிமனை பட்டா இல்லை. இது தொடர்பாக கிழக்கு தாசில்தார் அலுவலகம் முன்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன
    • வட்டாட்சியரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. விரைவில் பட்டா வழங்குவதாக வட்டாட்சியர் உறுதியளித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டு பகுதியில் அண்ணா காலனி, பர்மா காலனி, சாமியார் தோட்டம், குருநகர், வேடப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் வசிப்போருக்கு கடந்த பல ஆண்டுகளாகவே குடிமனை பட்டா இல்லை.

    அண்ணா காலனியில் வசிப்பவர்களுக்கு கடந்த 35 ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாத நிலையில் ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன. ஏற்கனவே இது தொடர்பாக கிழக்கு தாசில்தார் அலுவலகம் முன்பாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கு முன்பு பணியாற்றிய வட்டாட்சியர்கள் விரைவில் பட்டா வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

    இந்நிலையில் இன்று திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இலவச வீட்டு மனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு 35 வது வார்டு சி.பி.எம். கவுன்சிலர் ஜோதிபாசு தலைமை வகித்தார். கட்சியின் நகர செயலாளர் அரபு முகமது முன்னிலை வகித்தார். அடியனூத்து ஊராட்சி தலைவர் ஜீவானந்தம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 2வது வார்டு சி.பி.எம். கவுன்சிலர் கணேசன், நகர் குழு உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விஷ்ணுவர்தன் நன்றி கூறினார். பின்னர் வட்டாட்சியரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. விரைவில் பட்டா வழங்குவதாக வட்டாட்சியர் உறுதியளித்தார்.

    ×