என் மலர்
நீங்கள் தேடியது "ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்"
- முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் பல லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது.
- திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்திருந்தால் மதுரை தபால்தந்தி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்
திண்டுக்கல்:
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மதுரை பெத்தானியாபுரம் சின்னச்சாமிபிள்ளை தெருவில் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன் ஆகியோர் கூட்டு சேர்ந்து வி.எல்.சி. என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். பல கவர்ச்சிகரமான திட்டங்களின் மூலம் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ஆசைவார்த்தைகளை கூறினார்கள்.
ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் பல லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது. இந்நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தவர்கள் தற்போது புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
எனவே திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்திருந்தால் மதுரை தபால்தந்தி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






