என் மலர்
நீங்கள் தேடியது "உலக ரோல்பால் போட்டி"
- சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற ஒரு மாணவி உட்பட 9 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பெற்று திரும்பிய திண்டுக்கல் மாணவர்களுக்கு சின்னாளப்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.
சின்னாளப்பட்டி:
இலங்கையில் நபாக மாவட்டம், சுமேதா கல்லூரியில் உலக அளவிலான ரோல்பால் போட்டி நடைபெற்றது. 11 வயதுக்குட்பட்டோர், 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்கு மேற்பட்டோர் என 4 பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் 50 பேர் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல் சின்னாளப்பட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற ஒரு மாணவி உட்பட 9 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்திய அணி 14 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்கும் மேற்பட்டோர் (பெண்கள்) ஆகிய 2 பிரிவுகளில் முதல் பரிசும், 11 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்கும் மேற்பட்ட சீனியர் பிரிவிலும் 2 ம் பரிசும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பெற்று திரும்பிய திண்டுக்கல் மாணவர்களுக்கு சின்னாளப்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவர்களை சர்வதேச நடுவரும், பயிற்சியாளருமான பிரேம்நாத், தென்னிந்திய ரோல்பால் சங்க செயலாளர் சுப்பிரமணியன், ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல்பால் சங்க செயலாளர் கோவிந்தராஜ், இந்திய அணி மேலாளர் ராஜசேகர் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.






