என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "YOUTH ARRESTED FOR STEALING GOATஆடு திருடிய வாலிபர் கைது"

    • ஆடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் சிறையில் அடைத்தனர்



    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன் விடுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான இவர், ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது வீட்டு அருகே இருந்த கொட்டகையில் கட்டி இருந்த 3 ஆடுகளை காணவில்லை. இது குறித்து மலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.

    இதற்கிடையே வெட்டன் விடுதி சந்தையில் நின்ற ஒரு வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தில். இதில் அவர் வேளாங்கண்ணி பூக்காரத்தெருவை சேர்ந்த சதீஷ்குமார் ( வயது32)என்பதும், பொன்னன் விடுதியில் காணாமல் போன 3 ஆடுகளையும் இவர் தான் திருடியது என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஆலங்குடி நீதித்துறை நடுவர் மன்ற நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×