என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச கண்ணாடி"

    • கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் கிராமத்தில் வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தலைமை தாங்கி கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார்.

    கண் சிகிச்சை முகாமில், கண் புரை, கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல், ஒற்றை தலைவலி, வெள்ளெழுத்து, சாலேஸ்வரம், கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்ணாடி தேவைபட்டவர்களுக்கு கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.

    மேலும், அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கு சென்னை மருத்துவமனையில் மேல் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கு செய்யப்பட்டனர்.

    நிகழ்ச்சியில், தனி வட்டாச்சியர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் குமார், ஒன்றிய சேர்மன் பாஸ்கரன் பங்கேற்றனர்.

    ×