என் மலர்
நீங்கள் தேடியது "மனநலம் பாதித்த உறவினர்"
- அண்ணி முனி ரத்தினம்மாவை கட்டையால் அடித்தார்.
- மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் கிராமத்தில் சுற்றித்திரிந்ததாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக் கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தளி அருகே கும்ளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பில்லப்பா (வயது 50). இவருடைய மனைவி முனிரத்தினம்மா (45). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் அவரைக்காய் பறித்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பில்லப்பாவின் தம்பியான மட்டப்பா என்ற கோபாலப்பா (வயது 45) என்பவர் தோட்டத்தில் அவரைக்காய் பறிக்க கூடாது என கூறியும் எப்படி பறிக்கலாம் என கூறி அவரது அண்ணி முனி ரத்தினம்மாவை கட்டையால் அடித்தார்.
இதில் படுகாயம் அடைந்த முனிரத்தினம்மா சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த தளி போலீசார் சடலத்தை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபாலப்பாவை கைது செய்தனர். கோபாலப்பாவின் மனைவி கடந்த சில ஆண்டுக்கு முன் அவரை பிரிந்து சென்றதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் கிராமத்தில் சுற்றித்திரிந்ததாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர்.இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






