என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழந்தவர்களுக்கு நிதி"

    • ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    ஆரணி:

    ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார்.

    வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் கவிதா துணைச் செயலாளர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் தாங்கினார். இந்த கூட்டத்தில் பணியின் போது உயிரிழந்தவர்களுக்கான நிதி, மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் அலுவலக ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஊழியர்கள் ஊதியம் மற்றும் மேற்கு ஆரணி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமத்தின் வளர்ச்சி உள்ளிட்ட 32 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றபட்டன.

    நிகழ்ச்சியில் துணை ஒன்றிய குழு உறுப்பினர்கள் கீதா மோகன், பகுத்தறிவு துரைமாமது, வேலு, ஏழுமலை, குமாரராஜா வட்டார வளர்ச்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ×