என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தையை குப்பையில் வீசிச்சென்ற தாய்"
- குப்பை தொட்டிக்குள் ஒரு கட்டைப்பையில் இறந்த பெண் சிசு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
- குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த பெண்குழந்தை இறந்தே பிறந்ததால் அதனை வீட்டிற்கு எடுத்துச்செல்ல மனமில்லாமல் குப்பையில் வீசியதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தினசரி சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்ேதாறும் 10 முதல் 20 குழந்தைகள் பிறக்கின்றன. இந்நிலையில் இன்று காலை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவு அருகே இருந்த குப்பை தொட்டியில் தூய்மை பணியாளர்கள் குப்பையை எடுக்க வந்தனர்.
அப்போது குப்பை தொட்டிக்குள் ஒரு கட்டைப்பையில் இறந்த பெண் சிசு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து மகப்பேறு பிரிவில் இருந்த டாக்டர்களிடம் கொடுத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் நத்தம் அருகே சின்னமலையூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக்-லட்சுமி தம்பதிக்கு பிறந்த குழந்தையை அவர்கள் குப்பையில் வீசிச்சென்றது தெரியவந்தது. குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த பெண்குழந்தை இறந்தே பிறந்ததால் அதனை வீட்டிற்கு எடுத்துச்செல்ல மனமில்லாமல் குப்பையில் வீசியதாக தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து குழந்தையின் உடலை ஆஸ்பத்திரி நிர்வாகம் அந்த தம்பதியிடம் ஒப்படைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.






