என் மலர்
நீங்கள் தேடியது "நாங்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது."
- ஆசிரியர்கள் இட மாற்றத்துக்கு எதிர்ப்பு
- கல்வி அதிகாரிகள் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டையில் ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல் ஆசிரியர்கள் 4 பேர் சமீபத்தில் பணிநிரவல் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதை கண்டித்து மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர் பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக தகவல் பரவியது. அதன் பேரில் வேலூர் தெற்கு போலீசார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் பேச்சு வார்த்தைக்கு பின்னர் மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நாங்கள் அனைவரும் பொது தேர்வுக்கு தயாராகி வருகிறோம். இந்த நிலையில் திடீரென 4 ஆசிரியர்களை இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் நாங்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிதாக ஆசிரியர்களையும் உடனடியாக நியமிக்க மாட்டார்கள். ஏற்கனவே எங்கள் பள்ளியில் சில வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
ஆசிரியர்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவர்களை இதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்
ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் திட்டவட்டமாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர்கள் தயாளன், அங்கு லட்சுமி ஆகியோர் அங்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவிகளின் கோரிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.
இதனால் மனைவிகள் கலைந்து சென்றனர்.






