என் மலர்
நீங்கள் தேடியது "கேலி கிண்டல் செய்யும் நபர்கள்"
- கலெக்டர் எச்சரிக்கை
- குழந்தை திருமணம் குறித்து புகார் தெரிவிக்கலாம்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர்பாஸ்கர பாண்டியன் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குழந்தை திருமணம் நடப்பது குறித்து தகவல் தெரிய வரும் நிலையில் குழந்தை திருமணத்தை தடுத்து குழந்தைகள் திருமணம் மேற்கொள்ளும், சம்மந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்ய குழுவில் விவாதிக்கப்பட்டது.
இது குறித்து போலீசார்
நடவடிக்கை எடுக்க கலெக்டர் கேட்டுக்கொண்டார்.அப்போது தான் குழந்தை திருமணம் செய்வதால் தண்டனைகள் அதிகம் என்பதை பொதுமக்கள் உணர்வார்கள்.ஆகவே அதில் எவ்வித தலையீடின்றி காவல்துறையினர் செய்ய வேண்டும்.
மேலும் 18வயதிற்கு முன்னதாக கர்ப்பமடையும் பெண் பிள்ளைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் பட்சத்தில் அவர்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்கிட வேண்டும்.பல்வேறு தருணங்களில் பெண் பிள்ளைகள் ஆண்களிடம் ஏமாந்து விடுதல் மற்றும் குழந்தை திருமணங்கள் இவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் பிரசவத்திற்கு செல்லும் பொழுது பிரசவம் செய்வதில் சட்ட சிக்கல்களால் தாமதம் ஏற்படுகிறது.
இது குறித்த தகவல்கள் இதற்கு பின்னர் தான் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தெரிய வருகிறது.ஆகவே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் 18 வயதிற்கு கீழே உள்ள பெண்கள் கர்ப்பம் அடைந்து சிகிச்சைக்காக வரும் பொழுது முதலில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் வழங்கிட வேண்டும்.அப்போதுதான் அவர்கள் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க இவைகள் உதவியாக இருக்கும்.
அதேபோன்று காவல்துறையின் மூலம் முதல் தகவல் அறிக்கையும் சம்மந்தப்பட்டவர்கள் மீது பதிந்து உரிய விசாரணை மேற்கொள்ள உதவியாக இருக்கும். இதன் மீது தனி கவனம் செலுத்தி துணை இயக்குனர் சுகாதாரம் அவர்கள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தகவல் தெரிவித்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
மேலும் அரக்கோணம் பகுதிகளில் பள்ளி மாணவிகளை கல்லூரி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வரும் பொழுது கேலி கிண்டல் பேசுவதாக புகார்கள் வருகின்றது என தெரிவிக்கப்பட்டது.இதன் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் மற்றும் உள்ளூர் குழந்தைகள் நல காவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் இக்குழு கூட்டம் நடைபெறும் போது கட்டாயமாக கலந்து கொள்ள விவாதிக்கப்பட்டது.
இதன் மீது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உரிய கடிதங்களை அனுப்பி கூட்டம் நடைபெறும் பொழுது வராதவர்கள் குறித்தும் கலந்து கொள்ளாதவர்கள் குறித்தும் தகவல்களை தன்னிடம் தெரிவிக்க வேண்டுமென மாவட்ட என கேட்டுக்கொண்டார்.கிராமப் பகுதிகளில் பெண் பிள்ளைகளுக்கும் குழந்தைகளுக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது இக்கூட்டம் மிக முக்கியமானது.
ஆகவே இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களை தெரிவிக்க வேண்டும்.தொடர்ந்து கூட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை கண்காணித்து வருவது குறித்தும், குழந்தைகள் குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன் ராதா, குழந்தைகள் நல குழுமத் தலைவர் வேதநாயகம், மாவட்ட சமூக நல அலுவலர் இந்திரா, துணை இயக்குனர் சுகாதாரம் மருமணிமாறன், துணை காவல் கண்காணிப்பாளர் ராஜுசுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






