என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர் கோரிக்கை"

    • கீழக்கரை நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் தனியார் வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
    • நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் கோரிக்கை விடுத்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை நகர் மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி சேர்மன் செஹனாஸ் ஆபீதா தலைமையிலும், துணை சேர்மன் வழக்கறிஞர் ஹமீது சுல்த்தான், கமிஷனர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது. இளநிலை உதவியாளர் உதயகுமார் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    ஹமீது சுல்த்தான் (துணை சேர்மன்) :- நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்ப டும் திட்டப்பணிகள் குறித்து நகராட்சி துணைத் தலைவர் அல்லது குறிப்பிட்ட கவுன்சிலர்களை அழைத்து கருத்துக்களை கேட்பது கிடையாது.

    இந்த நடைமுறையை மாற்றி திட்டபணிகள் மதிப்பீடு செய்யும்போது சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். நகராட்சி அலுவலர்கள் வார்டு களில் ஏதேனும் பணி செய்தால் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுங்கள். நக ராட்சி அலுவலர்கள் கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளித்து செயல்பட வேண்டும்

    ஷேக் உசேன்:- ஒவ்வொரு கூட்டத்திலும் நான் கேள்விகள் கேட்கிறேன். நீங்கள் குறிப்பு எடுக்கிறீர்கள். ஆனால் நடவடிக்கை இல்லை. கண்துடைப்பாக உள்ளது.

    கீழக்கரை நகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் தனியார் வாகனங்களை சுகாதார அலுவலர்கள் முறைப்படி ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பிறகே குடிநீர் வினியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    இந்த வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்வ தால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    முகம்மது பாதுஷா:- கீழக்கரை நகராட்சியில் குடிநீர் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1,800 வசூல் செய்யப்படுகிறது. ஆனால் மாநகராட்சியிலேயே ரூ.1,200 மட்டுமே வசூல் செய்யப்படுகிறது. இதன் மேல் தனிகவனம் செலுத்தி கூடுதல் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    வார்டு வரையரையை உடனடியாக செய்ய வேண்டும். தெருவில் சுகாதார பணியாளர்கள் சரிவர துப்புரவு பணி மேற்கொள்வதில்லை. முறையாக குடிநீர் வருவது இல்லை.

    கீழக்கரை நகரில் அதிகமான மாடுகள் சாலை களில் உலா வருகிறது. மழை நீர் தேங்கிய இடத்தில் கொசுக்கள் உற்பத்தியாவதால் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.

    இறுதியாக நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபீதா, நகர் மன்ற உறுப்பி னர்களின் கோரிக்கைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் அருள், பணி மேற்பார்வையாளர் சாம்பசிவன், அலுவலக மேலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×