என் மலர்
நீங்கள் தேடியது "பூசணிக்காய் விலை கடும் வீழ்ச்சி"
- ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.3-க்கு மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பூசணிக்காய்களை செடியிேலயே பறிக்காமல் விட்டுவிடும் அவலநிலை உள்ளது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டி ராயகவுண்டன்புதூர் அரசப்பபிள்ளைபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நாட்டுப்பூசணிக்காய் பயிரிட்டுள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு பணியில் மேற்கொண்ட நிலையில் தற்போது பூசணிக்காய் நன்கு செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ பூசணிக்காய் ரூ.3-க்கு மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பறிப்பு கூலிக்குகூட பணம் கிடைக்காததால் செடியிலேயே பூசணிக்காய்களை விட்டுவிடுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், நாட்டுபூசணிக்காய் நல்ல விளைச்சல் இருந்தபோதும் போதிய விலை கிடைக்கவில்ைல. அவ்வாறு கொண்டுசெல்லப்படும் காய்கறிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் குறைவான விலையிலேயே வாங்குகின்றனர்.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் பூசணிக்காய்களை செடியிேலயே பறிக்காமல் விட்டுவிடும் அவலநிலை உள்ளது. எனவே அரசு இதற்கு தீர்வுகாணவேண்டும் என்றனர்.






