என் மலர்
நீங்கள் தேடியது "ஓய்வு பெற்றோர் அமைப்பு கூட்டம்"
- ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடந்தது.
- ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுப் பெற்றோர் நல அமைப்பின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடந்தது.
கிளைத் தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் நரசிம்மன் முன்னிலை வகித்தார். இணைச் செயலாளர் நந்தியப்பன் வரவேற்றார். கிளை செயலாளர் முனிரத்தினம், முன்னாள் தலைவர் மோகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் கணேசன் சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் சந்திரன் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில், மின்துறையை பொதுத்துறையாகவே பாதுகாத்திட வேண்டும். மின்சார திருத்தம் மசோதாவை திரும்பப் பெற வேண்டும். கடந்த ஏப்ரல் 12-ந் தேதி வெளியான மின்சார ஆணையை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.
விதவை, விவாகரத்து ஆனவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். கடந்த 2003 ஏப்ரல் 1-ந் தேதிக்கு பின்பும், முன்பும் ஓய்வு பெற்ற ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






