என் மலர்
நீங்கள் தேடியது "சோதனை சாவடியில் சி.சி.டி.வி காமிராக்கள் பழுது"
- கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியாக இருக்கும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி காமிராக்கள் தற்போது பழுதடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
- எல்ைலப்பகுதியில் சி.சி.டி.வி காமிராக்கள் இல்லாமல் இருப்பது பல்வேறு சவால்களை போலீசாருக்கு ஏற்படுத்தும் என பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானலுக்கு வரும் நுழைவாயில் பகுதியாக வெள்ளிநீர் வீழ்ச்சி சோதனைச்சாவடி உள்ளது.
இந்தப் பகுதியில் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு நகராட்சி மூலமாக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வருவது தொடர்ந்து வருகிறது. இங்கு திருடப்பட்டு வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை காவல்துறையினர் கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியாக இருக்கும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமராக்கள் தற்போது பழுதடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் திருடப்பட்டு செல்லும் வாகனங்கள் அப்பகுதியின் வழியே செல்லும் போது பதிவுகள் இல்லாததால் திருடர்கள் எளிதாக தப்பிச்செல்லும் நிைல ஏற்பட்டுள்ளது.
காமிராக்கள் செயல்பாட்டில் இருக்கும் போதே குற்றவாளிகளை பிடிக்க முடியாத நிலை இருக்கும் சூழலில் காமிராக்களும் செயல்பாட்டில் இல்லாததால் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தற்போது இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் கொடைக்கானலில் தங்கி உள்ளனர். குற்றச்சம்பவங்களை தடுக்க நகரின் எல்ைலப்பகுதியில் சி.சி.டி.வி காமிராக்கள் இல்லாமல் இருப்பது பல்வேறு சவால்களை போலீசாருக்கு ஏற்படுத்தும் என பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.






