என் மலர்
நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளி குழந்தைகள் தின விழா"
- மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் சாதாரண மாணவர்களுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஒருங்கிணைந்து கல்வி கற்கவும் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தைகள் தின விழா நடைபெற்றது. மாற்றுத்திறன் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் தனி திறமைகளை வெளிக் கொண்டுவரும் விதத்திலும் சாதாரண மாணவர்களுடன் மாற்றுத்திறன் மாணவர்களும் ஒருங்கிணைந்து கல்வி கற்று நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கும் வகையில் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. அதில் ஊத்தங்கரை ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் சாதாரண மாணவர்களுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் மாணவர்கள் தாழ்வு மனப்பாண்மை அகற்றிடவும் சாதாரண மாணவர்களுடன் ஒருங்கிணைந்து கல்வி கற்கவும் தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிகழ்வில் வட்டார மேற்பார்வையாளர் வசந்தி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் ஜெயமணி பாக்கியராஜ் ஆனந்தன் பிரபு ராஜ் கமல் ராஜசேகர் வசந்தி கோவிந்தராஜ் ஜெயபிரகாசம் சண்முகம் சிறப்பு பயிற்றுநர் காமாட்சி சுரேஷ் ரமேஷ் பிரபாகரன் வைரம்மாள் பிசியோதெரபி ஆசிரியர் கோகிலா மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், அரசு மேல்நிலைப்பள்ளி உதவி ஆசிரியை விஜயலட்சுமி, ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






