என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் ரத்த தானம்"
- 5 மையங்களில் நடைபெற்றது
- 143 பேர் ரத்த தானம் செய்தனர்.
வேலூர்:
வேலூரில் 76-வது என்.சி.சி. தினத்தையொட்டி சி.எம்.சி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, வாணியம்பாடி அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் 10வது பட்டாலியனுக்கு உட்பட்ட சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரி உள்பட 5 மையங்களில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
5 மையங்களையும் சேர்த்து மொத்தம் 143 என்சிசி மாணவ, மாணவிகள் முகாமில் ரத்த தானம் செய்தனர். சி.எம்.சி. மருத்துவமனையில் ரத்த தான முகாம் தொடக்க விழா நடைபெற்றது.
10வது பட்டாலியன் என்சிசி நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் எஸ்.கே. சுந்தரம் தலைமையில் பட்டாலியன் மக்கள் தொடர்பு மற்றும் என்சிசி முதன்மை அலுவலர் க. ராஜா, சுபேதார் தினேஷ் குமார், அவில்தார் தீபு ஆகியோர் முகாமை வழி நடத்தினர். வேலூர் விஐடி பல்கலைக்கழகம், ஊரீஸ் கல்லூரி, மேல்விஷாரம் சி.அப்துல் ஹகீம் கல்லூரி, குடியாத்தம் அரசினர் திருமகள் மில்ஸ் கலைக் கல்லூரி உள்ளிட்ட என்சிசி மாணவ, மாணவர்கள் 30 பேர் சி.எம்.சி மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர்.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனை ரத்த வங்கியின் தலைவர்கள் மற்றும் டாக்டர் டாலி டேனியல், டாக்டர் சுகீஷ், மேற்பார்வையாளர் அமல்ராஜ் மற்றும் ரத்த வங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெ. அருள் பாக்கியராஜ் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று ரத்த தானம் செய்த என்சிசி மாணவர்களது சேவை மனப்பான்மை குறித்து வாழ்த்தி பாராட்டினர், பின்னர் ரத்த தானம் செய்த அனைத்து என்சிசி மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
10-வது பட்டாலியன் சுபேதார் மேஜர் சட்பீர் சிங், பயிற்சி பிரிவு சுபேதார் மகாலிங்கம், ராணுவ வீரர்கள் ஹவில்தார்கள் வெங்கடேசன், துரை முருகன், ரஞ்சித், சீனுவாசன், குல்வந்த் சிங், ஜீட் சிங் மற்றும் சுனில்தத் உள்பட பலர் பங்கேற்றனர்.






