என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரலாற்று ஆர்வலர்"

    • வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்ட னர்.
    • சுடு மண்ணாலான விநாயகர் சிற்ப பொம்மை கண்டறியப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங் கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்ட னர். அப்போது சுடுமண்ணாலான விநாயகர் சிற்ப பொம்மையை கண்டறிந்தனர். இதைக் குறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:-

    கடந்த சில வருடங்களா கவே பண்ருட்டி பகுதியில் இருக்கிற ஊர்கள் மற்றும் தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளிலும் களஆய்வு மேற்கொண்டு அங்கே கிடைக்கின்ற தொல்பொருட்களை ஆவணப்படுத்தி வருகிறேன். நேற்றைய தினம் எனதிரி மங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டபோது சுடு மண்ணாலான விநாயகர் சிற்ப பொம்மை கண்டறியப்பட்டது. இந்த விநாயகர் சிற்பத்தின் உயரம் 15 செ.மீ, அகலம் 7 செ.மீ சுடுமண் விநாயகர் பொம்மை இரண்டு கரங்களுடன் காணப்படுகிறது.

    தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளிலும் ஓட்டையும், துதிக்கை நீண்டும் உள்ளது, இரு கைகளில் உள்ள தோள்களிலும் காப்பு அணிந்துள்ளார், விநாயகர் குழந்தையைப் போன்று பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். இதற்கு முன்பு பண்ருட்டி பகுதி தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சுடுமண்ணாலான உருவ பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் சுடுமண்ணாலான தெய்வ உருவ பொம்மை கிடைத்தது இதுவே முதல் முறையாகும். சுடுமண் விநாயகரின் சிற்ப அமைதியை பார்க்கும் போது இது சோழர்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அவர் கூறும்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மண்ணுக்கடியில் இருந்து இச்சுடுமண் சிற்பம் வெளியே வந்திருக்கலாம் என்றார்.

    ×