என் மலர்
நீங்கள் தேடியது "டையாளம் தெரியாத வாகனம்"
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). பைக்கில் போர்வைகளை வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் கிராமம் முஸ்லீம் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருப்பதி சென்னை நெடுஞ்சா லையை கடக்க முயன்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் செல்வராஜ் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. அதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






