என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேயர் சத்யா திடீர் ஆய்வு"

    • குடிநீர் பிரச்சினை இருந்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.
    • வீடுகள்தோறும் நேரிடையாக பார்வையிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட வண்ணார் தெரு, ஜனப்பர் தெரு, கீழ் கொல்லர் தெரு, செம்படவர் தெரு, காஜல் பண்டா, சுண்ணாம்பு தெரு, பாகலூர் சாலை ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், சாலை, குடிநீர் பிரச்சினை இருந்து வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா நேற்று அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கழிவுநீர் கால்வாய், சாலை வசதி, குடிநீர் பிரச்சினைகள் குறித்து வீடுகள்தோறும் நேரிடையாக பார்வை யிட்டார்.

    பின்னர் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். ஆய்வின் போது துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிர மணியன், பொறியாளர் ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    ×