என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூ.8.07 கோடி"

    • கூட்டுறவு வார விழாவில் ரூ.8.07 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் 69-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தலைமையில், அரியலூர் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,

    விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், சிறந்த சங்கங்களுக்கு கேடயங்கள், சிறுவர், சிறுமிகளுக்கு சிறுதுளி சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் உண்டிப்பெட்டிகள் மற்றும் 1,097 பயனாளிகளுக்கு ரூ.8.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ேபசினார்.

    அப்போது அவர் கூறும் போது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்திற்கு சுயஉதவிக்குழுக்களை முதலில் அறிமுகப்படுத்தி திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆவார். மேலும், அவர் வழியில் கடந்த 2006-ஆம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் துணை முதலமைச்சராக இருந்தபொழுது தமிழகம் முழுவதும் சென்று மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கினார். அதேபோன்று அரியலூர் மாவட்டத்திற்கும் வருகை தந்து மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கியுள்ளார்கள். தற்பொழுது மகளிர் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு புதிய கடன் உதவிகளும் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை அனைத்து பயனாளிகளும் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும்,

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×