என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலையில் பலத்த காயமடைந்தார்"

    • வேகத்தடையில் ஏறி இறங்கியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த ஆதனூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 60), விவசாயி. இவருக்கு குமாரி என்ற மனைவியும், 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் மணி கார்த்திகை மாதத்தை யொட்டி நேற்று மோட்டார் சைக்கிளில் வேலூரை அடுத்த மாத னூர் கிராமத்தில் உள்ள அய் யப்பன் கோவிலுக்கு சென் றார். பின்னர் அவர் மோட் டார் சைக்கிளில் ஆரணி நோக்கி வந்து கொண்டிருந் தார்.

    ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் இருந்து ஆதனூர் செல்வதற்காக திரும்பும் போது அங்குள்ள வேகத்த டையில் ஏறி இறங்கியபோது நிலை தடுமாறி கீழே விழுந் தார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த மணியை சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×