என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6-வது நாளாக மக்கள் போராட்டம்"

    • பொதுமக்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதியு ள்ளாவதாகவும் கூறப்படுகிறது.
    • போரா ட்டத்தில் ஈடுபட்ட வர்களை அழைத்து கலெக்டர் அலுவ லகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதி தேன்கனிகோட்டை அடுத்த கொரட்ட கிரியில் 6 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.

    இந்த கல்குவாரிகளால் அந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படைவதாகவும், பொதுமக்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் கல்குவாரிகளில் உள்ள கனரக வாகனங்கள், லாரிகள் அந்த கிராமத்தின் வழியாக செல்லும் போதும் பள்ளி குழந்தைகள் சத்தத்தினால் படிக்க முடியவில்லை.

    கல்குவாரிகளில் கல் உடைக்க வைக்கும் வெடி வெடிப்பதன் மூலம் அதிகப்படியான சத்தம், நச்சு காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு கர்ப்பிணி பெண்கள் அதிகமாக பாதிக்கபடுகிறார்கள்.

    கல்குவாரிகளில் இருந்து வரும் லாரிகள் கிராமத்தின் வழியாக செல்வதை தடுக்க வேண்டும். இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியவில்லை. இதனால் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த வித பலனும் இல்லை.

    இதனால் அப்பகுதி மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஊருக்கு வெளியே காட்டில் கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தினர்.

    இது பற்றி அறிந்த கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி நேற்று மாலை போரட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து கலெக்டர் அலுவ லகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    ஆனால் பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஏற்க மறுத்து, தங்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி இன்று 6-வது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போலீசார் அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×