என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமையாளர்களுக்கு அபராதம்"

    • ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்டது
    • மாடுகளை வீட்டுக்குள் கட்டி வைக்கும்படி மைக் மூலம் அறிவிப்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மாடுகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன.

    காட்பாடி சத்துவாச்சாரி ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான மாடுகள் படுத்து கிடக்கின்றன.

    மாடுகளை கட்டவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாடுகள் சுற்றி திரிவதை அவர்கள் நிறுத்தவில்லை.

    காட்பாடியில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மெயின் ரோடுகளில் சுற்றி திரியும் 5 மாடுகள் பிடிக்கப்பட்டன.

    பிடிக்கப்பட்ட மாடுகள், உரிமையாளர்கள் வந்தால் ஒரு மாட்டுக்கு ரூ.5ஆயிரம் அபராதம் கட்டிய பிறகு மாடுகள் விடுவிக்கப்படும், இல்லை என்றால் மாடுகள் ஜெயின் கோசலாவில் விடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் தினசரி மாடுகள் பிடிக்கப்பட உள்ளது உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை வெளியே விடாமல் வீட்டுக்குள் கட்டி வைக்கும்படி மைக் மூலம் தெரிவிக்கப்பட்டது.

    ×